ஜோசப் ஆண்டகையின் பெயரில் சதுக்கம் !

ஜோசப் ஆண்டகையின் பெயரில் புதிய சதுக்கம் உருவாக்கப்படவேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர் தாயகத்தில் ஒரு புனிதமான சதுக்கம் உருவாக்கி பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பெயரிடப்பட வேண்டும் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கடந்த 1505 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் உயிரிழந்த பேராயர் இராயப்பு ஜோசப ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது. … Continue reading ஜோசப் ஆண்டகையின் பெயரில் சதுக்கம் !